கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு

கட்டுநாயக்க, ஆடியம்பளம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் வைத்து வியாபாரி ஒருவர் மீது குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்