
கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் தவறான முடிவுக்கு முயற்சித்த நபர்
வவுனியாவில் கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த அநுரகுமார (வயது – 51) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த மூன்று தினங்களாக வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வந்து சென்றதாகவும் எனினும் தனக்கு கடவுச்சீட்டை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த குறித்த நபர் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என கூறி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து காரியாலய உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கியிருந்ததை தொடர்ந்து குறித்த நபர் மரத்திலிருந்து கீழ் இறங்கியுள்ளார்.
