கடற்கரையில் மோசமாக நடந்துகொண்ட 35 ஜோடிகள் கைது
களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள் அனைவரும் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.