கடற்கரையில் மயங்கி விழுந்து கிடந்த தம்பதியினர்

35

-மன்னார் நிருபர்-

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று திங்கட்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து  மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sureshkumar
Srinath