கஞ்சா வழக்கில் சிம்பு பட இணை தயாரிப்பாளர் கைது

சென்னை கஞ்சா வழக்கில் சர்புதீன், சீனிவாசன், சரத் என்ற 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில் கைதான சர்புதீன் நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கைதான சர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், ஒரு கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் சர்புதீன் தொடர்பில் இருப்பதும், அந்நிறுவனத்தின் பணம் தான் என சர்புதீன் தெரிவித்த போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சர்புதீன் நடத்திய போதை விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் காவல்துயை விசாரணை நடத்தி வருகின்றனர்.