கஞ்சா போதைப்பொருளுடன் 3 பேர் கைது

-பதுளை நிருபர்-

பதுளையில் 6400 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிஜன சேவா நிலையத்திற்கு அருகில் வசிக்கும் நபர் ஒருவரும் பூஜா நகர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஒவ்வொருவரிடமும் 3500 மில்லி கிராம், 1400 மில்லி கிராம், 1500 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடம் இருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மஹியங்கனை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24