கஞ்சா செடிகள் மீட்பு
கொஸ்லந்த பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட காணி ஒன்றை அப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து நேற்று புதன்கிழமை மாலை குறித்த பிரதேசத்திலுள்ள கஞ்சா செய்கை செய்யப்பட்ட காணி சுற்றிவளைக்கப்பட்டு அங்கு 15 பேச் நிலப்பரப்பில் பயிரடப்பட்ட 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்