
கஞ்சா செடிகளுடன் பிரித்தானிய பிரஜை கைது
ஹம்பாந்தோட்ட பெலியத்தை பகுதியில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை குஷ் போதைபொருள் தயாரிப்பதற்காக குறித்த கஞ்சா செடிகளை வளத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது 5 அடி உயரமுடைய கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
