ஓய்வு பெற்ற ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை நேற்று செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆத்தியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்