ஓட்டமாவடி பிரதேசத்தை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் தாருங்கள்: ஹிஸ்புல்லாஹ்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் மு.கா சார்பாக போட்டியிடும் மீராவோடை மேற்கு வேட்பாளர் ஜ.எம்.றிஸ்வினை ஆதரித்து பிரசார கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் சிந்தித்து வாக்களித்து ஒன்பது வட்டாரங்களையும் வெற்றி பெற வைத்து, சபையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருங்கள்.

எதிர்வரும் நான்காண்டுகளுக்கு, சகல அதிகாரங்களையும் கொண்டு நாங்கள் உங்கள் பிரதேசத்தைக் கட்யெழுப்புவோம். அதற்கான முழுமையான சந்தர்ப்பதையும் எமக்குத்தாருங்கள் என அவரது உரையில் கேட்டுக்கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க