“ஒரு தந்தையை போல நான் உங்களுக்காக இருப்பேன்” – துனித்துக்கு ஆறுதல் கூறிய சனத் ஜயசூரிய!
கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகேயின் மறைவுக்கு இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய இரங்கல் தெரிவித்துள்ளார்.
துனித் வெல்லாலகேயின் இந்த கடினமான தருணத்தில் அவருக்கு தனது ஆறுதலை சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார், “நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஒரு தந்தையைப் போல நான் உங்களுக்காக இருப்பேன் – உங்களை வழிநடத்துகிறேன், உங்களுடன் நிற்கிறேன், முழு அணியும், தேசமும், இந்த விளையாட்டை நேசிக்கும் அனைவரும் உங்கள் பக்கத்தில் உள்ளனர்” என்று சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

