ஐ.ம.ச வின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்-

 

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் எதிர்கால தேர்தல்களை முகங்கொடுப்பது சம்பந்தமாக மூதூர் தொகுதி கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சி தலைவரின் செயலாளர் வருண தகநாயக்க உட்பட கட்சி அமைப்பாளர்கள்,  முகாமையாளர்கள்,  உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்