
ஐ போனை 1000 ரூபாவிற்கு விற்ற யாசகர்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை யாசகர் ஐ போனை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
யாசகம் கேட்டு வந்த முதியவர் வீட்டிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போனை திருடிச் சென்றுள்ளார்.
இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார்.
திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து அந்தப் பணத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட ஐ போன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
