ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, ​​மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவிததுள்ளார்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.