
ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது
-பதுளை நிருபர்-
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, உடன் ஸ்தானத்திற்கு விரைந்து சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் 19,,25, 26, 35 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை இன்று செவ்வாய்க்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்