ஐஸ் போதையுடன் கைதடியில் சந்தேகநபர்கள் கைது

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் தலா ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நட வடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.