ஐஸ் போதைப்பொருளுடன் தொலைக்காட்சி நடிகர் கைது

சட்டவிரோத போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த தொலைக்காட்சி நடிகர் ஒருவர் பொலிஸாருக்கு ஒரு மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கி கைது செய்யாமல் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகரான சந்தேக நபர் (வயது 26) வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு தலைமையகப் பொறுப்பதிகாரிக்கு ஒரு மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்க முற்பட்டதாக ,குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலின் பேரில் பலஹருவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர், 10.300 கிராம் சட்டவிரோத போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் பகுதியில் 40 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவருக்கு எதிரான சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் சிஐடி பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்