ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையின் முதல் கட்ட அறிவிப்பு, நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணி முதல் இன்று சனிக்கிழமை இரவு 9:00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

காலி மாவட்டம்: பத்தேகம
கண்டி மாவட்டம்: கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம்: அரநாயக்க
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட்
இரத்தினபுர மாவட்டம்: கிரிஎல்ல