ஐந்து பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மீட்பு

29

-நுவரெலியா நிருபர்-

திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசல் மீட்கப்பட்டுள்ளது.

திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதையடுத்தே இவ்வாறு மீட்கப்படடுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று திங்கட்கிழமை ஹட்டன் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sureshkumar
Srinath