ஐசிசி தடை விதிக்க சாத்தியம் : நாடாளுமன்றத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்தால் அதற்கு பாராளுமன்றமே பொறுப்பேற்க நேரிடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் அலுவலக அதிகாரிகள் பதவி விலகுவது மற்றும் புதிய விளையாட்டு சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான பொதுவான நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் முன்வைத்த கூட்டு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் விஜேசேகர எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான கூட்டுப் பிரேரணை மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மாலையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்