ஏற்றுமதி விவசாய பணிப்பாளர் பதவிக்கு புதிய நியமனம்
ஏற்றுமதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி வகித்த இலங்கை விஞ்ஞான சேவைகள் விசேடதர அதிகாரியான ஏ.பீ.பீ. திஸ்னா தற்போது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அதற்கமைய, தற்போது குறித்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக (ஆய்வு) கடமையாற்றுகின்ற இலங்கை விஞ்ஞான சேவைகள் விசேடதர அதிகாரியான எம்.கே.எஸ்.ஆர். டீ. சமரசிங்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.