ஏமாற்றிய நபர் நீல பையிலிருந்து மீட்பு
சீதுவ கிதிகொட பிரதேசத்தில் தடுகம் ஓயாவின் கரையில் நீலநிற பயண பையொன்றில் ஆண் ஒருவரின் சிதைந்த சடலம் அண்மையில் மீட்கப்பட்டது.
மாரவில பிரதேசத்தை சேர்ந்த வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் முகவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடமிருந்து பணத்தை மோசடி செய்தவர் எனவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
தன்னுடைய வீட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியேறியவரை இவ்வாறு காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.