எஸ்கோ நிறுவனத்தினரினால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் தையல் இயந்திரங்கள் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டு கோளுக்கு அமைவாக எஸ்கோ நிறுவன பணிப்பாளர் ஸ்பிரித்தியோன் இவ் புதிய தையல் இயந்திரங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எஸ்கோ நிறுவனமானது கடந்த காலங்களில் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தல், பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்தல், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி சிறார்களுக்கான கல்வி வழங்கள், மாதர்கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் போன்ற செயற் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் எஸ்கோ நிறுவன உதவி பணிப்பாளர் கோதைநாயகி,  திட்ட இணைப்பாளர் எஸ். உதயேந்திரன் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க