எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைளுடன் இருவர் கைது

எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முறையற்ற விதத்தில் வெளியே எடுத்துச் சென்ற இரண்டு பெண் பயணிகளை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் வசிக்கும் 45 மற்றும் 47 வயதுடைய இரு வர்த்தகப் பெண்கள் ஆவர்.

இவர்களது பயணப் பையில் இருந்த 12 தங்க வளையல்கள், தங்க நெக்லஸ், 02 வளையல்கள், 01 தங்கப் பதக்கங்கள், 02 தங்க மோதிரங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்