எலும்பு முறியாமல் மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்கலாம் – தாலிபான் அரசு
ஆப்கானிஸ்தானில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தாலிபான் அரசு.
ஆப்கானிஸ்தான் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடாவால் கையொப்பமிடப்பட்ட, தே மகாகுமு ஜசாய் ஒசுல்னாமா(De Mahakumu Jazaai Osulnama) என்ற ஆவணம், ஆப்கானிஸ்தான் முழுவதுமுள்ள நீதிமன்றங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஆண் தன் மனைவியையோ குழந்தைகளையோ அடிக்கலாம். ரத்தம் வரும் காயமோ, எலும்பு முறிவோ ஏற்பட்டால் தான் அது குற்றமாக கருதப்படும் என குறித்த தண்டனைச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்படி, எலும்பு_முறிவுகள் அல்லது காயங்கள் போன்ற வழக்குகளில் கணவருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால், மனைவி நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதியிடம் காயங்களை காட்டி தான் பாதிக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஆனால், முழுவதுமாக உடலை மூடி இருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கணவர் அல்லது ஆண் பாதுகாவலரை உடன் அழைத்து வர வேண்டும்.
மேலும், கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தன் உறவினர்களை பார்க்க சென்றால் 3 மாதம் வரை சிறை தண்டனை வழங்க அந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
