எச்சரிக்கை மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
நாட்டின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.