ஊவா பல்கலை மாணவர்கள் 14 பேரின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்ட 14 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்களை விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்