ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் நில மீட்பு பொது முகாமையாளர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் நில மீட்பு பொது முகாமையாளர் கைது

இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் பொது முகாமையாள் திருமதி எம்.ஆர். ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர இன்று வியாழக்கிழமை இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படடுள்ளார்.

வேரஸ் கங்கா திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழாவுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் ஆணைய வளாகத்தில் காவலில் வைக்கப்படடுள்ளார்.

ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த நிகழ்வை நடத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் நடைமுறைகளுக்கு வெளியே ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், அதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு தேவையற்ற நன்மையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த செலவுகளுக்கு அதிகாரப்பூர்வ ஒதுக்கீடு எதுவும் இல்லாத போதிலும், திட்ட நிதியிலிருந்து ரூ. 27 மில்லியன் விழாவிற்குப் பயன்படுத்தப்பட்டதாக, புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.

விசாரணைகளின் பின்னர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News