ஊரடங்கு உத்தரவு தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள காலப்பகுதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

முன்னதாக இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.