உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

மகியங்கனை பொலிஸ் பிரிவின் கோவில்யாய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகியங்கனை , சொரபொரவில் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.