உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் ஆறு பேர் கைது

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் 6 சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 06 உள்நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் அறுவரும் குற்றச் செயலொன்றுக்காக திட்டமிட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்