உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ள அம்பாறை சிறுமி

அம்பாறை மாவட்டத்தின் மின்ஹத் லமி என்ற சிறுமி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதியில் வசிக்கும், ஸர்ஜுன் அக்மல் – பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி, தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

உலக சாதனை புத்தக நிறுவனம் இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.