உயர் பாதுகாப்பு வலய காங்கேசன்துறை மாங்கொல்லையில் ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்குஇ மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபனம் இடம்பெற்றது.

இந்த ஆலயம் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்தது. கடந்த ஜூன் மாதக் கால பகுதியில் ஆலய சூழல் மற்றும் அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி சென்ற நிலையில் ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞான வைரவர் ஆலய பாலஸ்தாபனம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்