
உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறிய அனைவரும் பதவி வேறுபாடின்றி பதிலளிக்க வேண்டும்
உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய அனைவரும் பதவி வேறுபாடின்றி பதிலளிக்கத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பொது விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒழிந்துகொண்டு தற்போதைய ஜனாதிபதி, பிரதமரினூடாக உயர் நீதிமன்றின் தீர்ப்பை மீற முயற்சிக்கிறார்.
அவ்வாறான கருத்துக்களைப் பொதுவெளியில் தெரிவிப்பார்களாயின் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்குப் பணிந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நட்டஈடு செலுத்தி வருகிறார்.
எனவே, உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய அனைவரும் தமது அரசாங்கத்தில் பதிலளிக்கத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்