உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன நாளை செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.