உந்துருளி-நோயாளர் காவு வண்டி மோதி விபத்து : 17 வயது மாணவி பலி

-பதுளை நிருபர்-

தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் உந்துருளியும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய மாணவி தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உந்துருளியை செலுத்திய 29 வயதுடைய நபர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்ட காவு வண்டி தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருக்கையில் அக்காவுவண்டியை உந்துருளி முந்திசெல்ல முற்பட்ட போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காவு வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172