உச்சபட்ச விலையை மீறி விற்பனை செய்யப்படும் அரிசி
நாட்டின் பல பகுதிகளில் உச்சபட்ச விலையை மீறி அரிசி விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நாட்டு அரிசி 1 கிலோகிராம் 220 ரூபாவாகவும் சம்பா அரிசி 1 கிலோகிராம் 230 ரூபாவாகவும் விற்பனை செய்வதற்கு உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், சந்தையில் 1 கிலோகிராம் நாட்டு அரிசி 235 ரூபாவுக்கும் சம்பா அரிசி 245 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
