கிழக்கு மாகாணத்தில் உச்சத்தை தொட்டது உப்பு

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பொருட்களின் விலையேற்றத்தால் குடும்பஸ்தர்கள் அவதியுற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

இந்நிலையில் சிவப்பு சீனியின் விலை ஒரு கிலோகிராம் 270 ரூபாய்வாகவும், ஒரு கிலோகிராம் கல் உப்பு 300 ரூபாவாகவும் தூள் உப்பு 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக உப்பு வியாபாரிகளிடம் வினவிய போது உப்பு விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளிடமிருந்து உப்பைப் பெறமுடியவில்லை. அப்படி பெற்றாலும் போக்கு வரத்து செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர்.

இதேவேளை புளி ஒரு கிலோகிராம் 2,500 ரூபாய் தொடக்கம் 3,000 ரூபாய் வரையிலும், மிளகாய் 2,000 ரூபாவாகவும் நடுத்தரமான இறால் 3,000 ரூபாவாகவும் சின்ன மீன்கள் தொடக்கம் பெரிய மீன்கள் வரை 1,000 ரூபாவுக்குக் குறைவாக வாங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்