இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என , இந்திய – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தங்கள் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி, இஸ்லாமிய இளம் தம்பதியர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுத்தாக்களை செய்து கொண்ட மணமகனுக்கு 21 வயது நிறைவு பெற்ற போதிலும், மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே  இருந்ததால் , இவ்வழக்கு இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சட்டப்படி குறைந்தபட்ச திருமண வயதாக ஆண்களுக்கு 21 வயதாகவும், பெண்களுக்கு 18 வயது என்றும் உள்ளது. தற்போது பெண்களுக்கும் திருமண வயதை 21 ஆக மாற்ற சட்டம் திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைளின் மத்தியில் இந்த வழக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

நீதிபதி ஜஸ்ஜித் சிங் பேடியின் ஒற்றை நீதிபதி அமர்வில் தம்பதியினரின் பெற்றோரின் வாதங்களில் இருசார் பெற்றோர்கள் தரப்பில் இந்த திருமணத்தில் அவர்களுக்கு விருப்பமில்லை எனவும் , மணப்பெண் 18 வயதை கூட எட்டாத மைனர் என்றும் வாதிடப்பட்டது. இது இந்திய சட்டத்திற்கு உட்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டது.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மேற்கோள்காட்டிய நீதிபதி, இஸ்லாமிய பெண்ணின் திருமணம் ” இஸ்லாமிய தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது”.  “சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் “முஹம்மதின் சட்டத்தின் கோட்பாடுகள்” என்ற புத்தகத்தின் பிரிவு 195 இன் படி, மணப்பெண் 15 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், அவர் விரும்பும் நபருடன் திருமண வாழ்க்கை நடத்தத் தகுதியுடையவர் என சுட்டிக்காட்டப்பட்டது.

மணமகன் 21 வயதுக்கு மேற்பட்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மனுதாரர்கள் இருவரும் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண வயதுடையவர்களே” என்றார் நீதிபதி ஜஸ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

“மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், இந்திய அரசியலமைப்பில் அவர்கள் எதிர்பார்த்த அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது” என்று நீதிபதி ஜஸ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தம்பதியரின் திருமணம் செல்லும் என்றும் , மனுதாரர்களின் அச்சத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும்என்றும், தம்பதியருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கவும் என பதன்கோட் பொலிஸ் கண்காளிப்பாளருக்கு  இவ்வழக்கில் இறுதியாக தீர்ப்பளித்த நீதிபதி ஜஸ்ஜித் சிங், உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஜோடியின் திருமணம் ஜூன் 8, 2022 அன்று முஸ்லீம்  சடங்குகளின்படி அங்கீகரிக்கப்பட்டது.