
இளைஞரின் விபரீத முடிவு
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
கிருஸ்ணகுமார் கிருசாந் (வயது – 27) என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்