இலஞ்சம் பெற்ற கமநல சேவை அதிகாரிகள் கைது

கண்டி அலவத்துகொட கமநல சேவை நிலைய அதிகாரிகள் இருவர், நெற்பயிர் நிலத்திற்கு மீட்பு சான்றிதழ் வழங்க ஒரு இலட்சம் ரூபாவை பெற்றபோது இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.