இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நாம் 200 நிகழ்வில் பங்கேற்க இலங்கை வந்தடைந்துள்ள அவரை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மேலும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வானூர்தி ஊடாக கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதுடன், இன்று மாலை திருகோணமலைக்கு செல்லவுள்ளமை குறிப்பித்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்