
இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
இலங்கை மின்சார சபை (CEB) தனது புதிய மின் கட்டண முறையை இலங்கையின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளுக்கு இ-பில்லிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை டிஜிட்டல் வடிவத்தில் SMS அல்லது மின்னஞ்சல் மூலம் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் பின்வரும் முறைகள் மூலம் சேவைக்கு பதிவு செய்யலாம்;
எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்யுங்கள்:
REG < space> கணக்கு எண்ணை டைப் செய்து 1987 க்கு அனுப்பவும்
ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்:
தயவுசெய்து http://ebill.ceb.lk ஐப் பார்வையிடவும் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
