இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (04) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர்களின் பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை, கொடுப்பனவு, பதவி உயர்வு வழங்கப்படாமை உட்பட 16 கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் .
