இலங்கை – இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 4-வது T20 போட்டி

இலங்கை மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் நான்காவது போட்டி இன்று ஞாயிற்றுக்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்திய அணி முயற்சிக்கும் அதேவேளை, ஆறுதல் வெற்றியைப் பெற்று மீண்டெழும் முனைப்பில் இலங்கை மகளிர் அணி களமிறங்கவுள்ளது.