இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரி போராட்டம்

 

இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரும் ஜனநாயக போராட்டமானது இன்று வியாழக்கிழமை யாழ் செல்வா நினைவு தூபி முன்பாக இடம்பெற்றது.

குறித்த போராட்டமானது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜாவால் முன்னெடுக்கப்பட்டது.

காலை 8 மணி தொடக்கம் உணவு தவிர்த்து இடம்பெற்ற இப்போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24