
இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
-கிண்ணியா நிருபர்-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கட்சியின் மாவட்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் முன்னிலையில் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இம்முறை நடை பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குச்சவெளி, தம்பலகாமம், வெருகல், மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமுறக்கப்பட்டு போட்டியிட்டுருந்தனர்.
இதன்போது திருகோணமலை மாநகர சபையின் மேயராக தமிழ் அரசு கட்சியை சார்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.