இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்களுக்கு விளக்கமறியல்!
கடந்த செப்டம்பர் 28ம் திகதி, நெடுந்தீவு கடலில் கைது செய்யப்பட்டு, இந்த மாதம் 1ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இன்று மீளவும் விசாரணைக்கு வந்த, 12 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும் , அதேபோல கடந்த 9ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, இன்றையதினம் ஒத்திவைக்கப்பட்ட 17 பாண்டிச்சேரி மீனவர்களின் வழக்கு விசாரணையும் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்திருந்தனர்
குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன், எதிர்வரும் 29ம் திகதிவரை, மீனவர்கள் 29 போரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.