
இலங்கை அணியின் 4 வீரர்களுக்கு ஓய்வு!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர்களுக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ, லஹிரு உதாரா மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் குறித்த போட்டியில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
