இலங்கையின் நிலையில் பாகிஸ்தான் : IMF இன் உதவியை நாடுகிறது

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியில் திரவ வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 10 பில்லியன் டொலராக குறைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிதி இன்னும் இரண்டு மாத இறக்குமதி செலவிற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், பாக்கிஸ்தான் இலங்கையை போன்ற நிலைக்கு தள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை பெறுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பெற்றோல் மற்றும் டீசல் விலை லீற்றருக்கு ரூ.30 (பாகிஸ்தான் ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் இஸ்லாமாபாத்தில் ஒரு லீற்றர் பெற்றோல் ரூ.179.86 ஆகவும், டீசல் ரூ.174.15 ஆகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பட்டினி கிடக்கும் அளவிற்கு மோசமடைந்துள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க